Tuesday 30th of April 2024 03:14:59 PM GMT

LANGUAGE - TAMIL
.
மகர சிறையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 கைதிகளுக்கு கொரோனா!

மகர சிறையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 கைதிகளுக்கு கொரோனா!


மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 26 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மகர சிறை வன்முறையில் காயமடைந்தவர்கள் கொழும்பு றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போதே குறித்த 26 கைதிகளுக்கும் கொரோனாத் தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டிருப்பதாக றாகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

மகர சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் 183 பேருக்கு நேற்றைய தினம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து சிறைச்சாலை கொரோனாத் தொற்று அதிகரித்துவருவதால் தமக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கைதிகள் கோரிவந்த நிலையிலேயே மகர சிறையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE